• TRUST EXAM DECEMBER 2023 SELECTED LIST.

    TRUST EXAM DECEMBER 2023 SELECTED LIST

  • CLASS 1 TO 12 TEXT BOOKS DOWNLOAD

    CLASS 1 TO 12 TEXT BOOKS DOWNLOAD.

  • PROMOTION PANEL DOWNLOAD

    PROMOTION PANEL DOWNLOAD.

  • DSE - Internal Audit.

    DSE தணிக்கை தடைகள் (Internal Audit) மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் !!!

  • Monitoring Officers List

    பொதுத் தேர்வுப் பணிகளை கண்காணிக்க (Monitoring Officers) மாவட்ட வரியாக உயர் அதிகாரிகள் / அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.06.2025

திருக்குறள்: 

குறள் 396:

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம் : தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பழமொழி :

A good reputation is a fair estate. 

நற்குணமே சிறந்த சொத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன். 

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். - இரால்ஃப் வால்டோ எமர்சன்.

பொது அறிவு : 

"01.இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? எங்கு உள்ளது?

குஞ்சிக்கல் நீர்விழ்ச்சி (கர்நாடகம்)

Kunchikal Falls (Karnataka)

02.  இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மக்மோகன் எல்லைக்கோடு 
Mcmohan Line

English words & Tips :

Event    -    நிகழ்வு.    

pride.    -     பெருமை 

TIPS

* The words your and you're are two different words with different meanings.

* Here is your coffee.

* You're looking good.

அறிவியல் களஞ்சியம் :

 உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது ‘ஸ்லாத்’. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாத்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரியாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.

ஜூன் 04

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது

நீதிக்கதை

 ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்

இன்றைய செய்திகள்

04.06.2025

இன்றைய செய்திகள் 

⭐ ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
 திண்டுக்கல்
சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

⭐40 ரஷ்ய விமானங்களை வீழ்த்தியது உக்ரைன். உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 40 ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டன.

⭐2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு கடலுக்கு அடியில் ரயில் சேவை; 2030-க்குள் தொடங்க திட்டம்!

விளையாட்டுச் செய்திகள்
இந்திய
கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா.

⭐ நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

 
Today's Headlines

*TODAY'S HEADLINES*
✏️The NEET Masters exam, which was scheduled to be held on June 15, has been postponed.

✏️ The Tamil Nadu government has announced that the biodiversity park in Sirumalai, Dindigul district, will be opened in 2 months.

✏️ Ukraine shoots down 40 Russian planes. 40 Russian planes were shot down in a drone attack carried out by Ukraine. 

✏️ Under water train service is Planned to start by  2030. The estimated travelling time 
from India to Dubai is 2 hours; 
 *SPORTS NEWS*

🏀 Rajiv Shukla becomes interim president of the Board of Control for Cricket in India. 

🏀 Chief Minister M.K. Stalin congratulates Tamil Nadu chess player Kukesha for defeating Magnus Carlsen in the Norway Chess Series.

Covai women ICT_போதிமரம்

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.06.25

திருக்குறள்: 

குறள் 397:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

பழமொழி :

Say well is good, but do well is better. 

நல்லதைச் சொல்வது நல்லது; அதை விட நல்லதை செய்வது நல்லது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி. -மகாத்மா காந்தி

பொது அறிவு : 

01.எந்த நாள் சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 24 (January 24)

02.எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?

காங்கோ ஆறு (Congo River)

English words & Tips :

intelligent - clever. விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல்.‌ 

wisdom - ability to make sensible decisions with one's knowledge. விவேகம், மதிநுட்பம்


 What Is a Common Noun?

  • Common Nouns Referring to Human Beings
  • Common Nouns Referring to Animals
  • Common Nouns Referring to Birds
  • Common Nouns Referring to Insects
  • Common Nouns Referring to Reptiles
  • Common Nouns Referring to Places
  • Common Nouns Referring to Things/Objects
  • Common Nouns Referring to Ideas

அறிவியல் களஞ்சியம் :

 பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..

ஜூன் 03

உலக மிதிவண்டி நாள்




உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது.

கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

நீதிக்கதை

 கிளியின் நட்பு


கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 

நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

03.06.2025

இன்றைய செய்திகள் 
⭐அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

⭐ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.

⭐ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

⭐உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் - 

விளையாட்டுச் செய்திகள்
🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 7 பேர் பதக்கம் வென்றனர். தொடர் ஓட்ட பந்தயங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சுபா வெங்கடேசன். 

🏀தென்கொரியாவில் நடந்த இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, | 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம் பெற்றது.


Today's Headlines

TODAY'S HEADLINES
✏ Tamilnadu School Education Department orders temporary appointment of teachers in government schools.

✏ UGC instructs colleges to submit anti-ragging schemes.

✏ Powerful earthquake in Japan. 6.0 hertz is recorded on the Richter scale. Buildings shook due to the powerful Earthquake.

✏In the two-and
a-half-year war in Ukraine, a highest toll of 45,287 Russian soldiers have died in 2024 alone -

 SPORTS NEWS
🏀 Out of the 9 athletes from Tamil Nadu who participated in the Asian Athletics Championships, 7 won medals. Subha Venkatesan won 2 medals in the relay races.

🏀 India finished second in the tournament held in South Korea with 24 medals, including 8 gold, 10 silver and 6 bronze.

Covai women ICT_போதிமரம்

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Share:

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.06.25

திருக்குறள்: 

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

பழமொழி :

He who has an art, has everywhere a part. 

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.

பொன்மொழி :

எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்

பொது அறிவு : 


01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது?

மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin

02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது?

ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River

English words & Tips :

 surprise        -        ஆச்சரியம்

 wonderful     -        அற்புதம்

When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.

  • John or Joe is coming tonight.
  • Either coffee or tea is fine.
  • Neither Kavi nor Nandhini was late.

அறிவியல் களஞ்சியம் :

 நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.

ஜூன் 02

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவுதினம்

கவிக்கோ அப்துல் ரகுமான்



அப்துல் ரகுமான் (S. Abdul Rahmanநவம்பர் 91937 - சூன் 22017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூகஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

நீதிக்கதை

 மாயக்கண்ணாடி


ஒரு சிறுவன், புத்தகக் கடையில் ஒரு அழகான கண்ணாடியைப் பார்த்தான்.அதில் பார்த்ததெல்லாம்  அப்படியே தெரிந்தது.தன் முகமும் புன்னகைப்பது போலவே தெரிந்தது.அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.


அவன் சந்தோசத்தில் சிரிக்கும் போது கண்ணாடியும் சிரித்தது. அவன் கோபப்பட்டபோது கண்ணாடியும் கோபப்படுவது போலவே தெரிந்தது.அதை வைத்து மகிழ்ச்சியுடன்  விளையாடினான்


ஒரு நாள்,அவன் கண்ணாடியை  தரையில் வீசினான். அது உடைந்து போனது. அந்த நேரம் தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. அவன் முகத்தையே கண்ணாடி காட்டியது! அவன் முகம் எப்படி இருக்கிறதோ, அதையே பிரதிபலித்தது என்பதைஅவன் உணர்ந்தான். 


வாழ்க்கையும் இப்படித்தான்! நாம் எப்படி இருப்போமோ, உலகமும் அதுபோலவே பிரதிபலிக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தால், உலகமே நல்லது தான்!


அதிகம் எதிர்பார்க்காமல், நம் மனதைச் சுத்தமாக வைத்தால் போதும்.நம்மால் உலகமே மாறும்.இதுவே மாயக்கண்ணாடி அவனுக்கு உணர்த்திய வாழ்க்கையின் பெரிய பாடமாகும்.

அவன் சிரித்தான் — உண்மையுடன்.


இன்றைய செய்திகள்

02.06.2025

⭐ கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் திறப்பு .

⭐புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம். -போக்குவரத்து துறை அறிவிப்பு.

⭐சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.

⭐ பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டினர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

விளையாட்டுச் செய்திகள்

⭐ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

  ⭐ தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!


Today's Headlines

✏All types of Tamil nadu state schools reopen after the summer vacation.

✏Students can travel using their old bus passes until a new bus pass is issued. -Transport Department announcement.

✏America'S President Trump imposed a 50% tariff on steel and aluminum imports from China.

✏A small planet three times farther from Earth than Neptune has been discovered. American scientists have named the new planet 'Planet Nine

 Sports news 

🏀Indian athlete Pooja Singh won the gold medal in the women's high jump at the Asian Athletics Championships, clearing 1.89 meters.

🏀Tamil Nadu athlete Vidya Ramraj won bronze in the 400m hurdles at the Asian Athletics Championships in South Korea, running with a swollen foot!

Follow our whatsapp channel for daily updates


Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Share:

Get Latest Updates: Follow Us On WhatsApp

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages

Popular Posts